Thursday 21 August 2014

Wednesday 1 August 2012


அந்தியூர் குதிரை சந்தை படங்கள் 

அவிநாசியில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரை இரண்டரை இலட்சம்


இந்த குதிரை 3ம் கிராஸ்க்காக கொண்டு வரப்பட்டதாம் 
ஒரு கிராஸ்க்கு 5 ஆயிரம்

65 ஆயிரம்


ஒரு லட்சத்து 50 ஆயிரம்

இது குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரை 2 இலட்சம், சாரட் வண்டிக்கு பழக்கப்டுத்தப்பட்ட குதிரையாம்..


இக்குதிரை தான் இந்த முறை அனைவரும் பார்த்த குதிரை சூர்யாவுடன் நடித்த குதிரையாம் இதன் விலை 5 இலட்சம், இதனுடன் கிராஸ்க்கு அனுப்பினால் 10000

3 இலட்சம்


இக்குதிரை ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்தது 1 லட்சமாம் இதன் மேல் அமர்ந்து புகைப்படம் எடுக்க அனுமதித்தார்கள் என் மகன் குதிரையில் உட்கார்ந்ததும் அழ ஆரம்பித்துவிட்டான்..


திருவிழாவில் சந்தைக்கு அடுத்த படியாக ராட்டினங்கள் தான் அனைவரது விருப்பம்.




சின்ன இராட்டினத்தில்  குழந்தை

 
திருவிழாவில் சந்தையை காண அலைமோதியக் கூட்டம்

அருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2


முதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் -



குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் யாரேனும் நுழைய முயற்சித்தால் கொடிய விஷ பாம்புகளிடம் கடிபட்டு இறப்பு நிச்சயம் என்பது சத்திய வாக்கு.


இப்பகுதிவாழ் மக்கள் தங்கள் தோட்டங்களில் வாழும் விஷ ஜந்துக்கள் தங்களை தீண்டக்கூடாதென வேண்டுதலிட்டு குலுக்கையை பாதுகாக்கும் பாம்பு புற்றுக்கு பூக்கள் இட்டு வணங்கி வருதல் இன்றும் நடந்து வருவது சிறப்பு.

தற்போதுள்ள மகாமண்டபம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமரர் சா.குருசாமி முதலியாரின் தீவிர முயற்சியின் பேரில் உருவானது.தற்போது அவர் தம் குடும்ப வாரீசுகளால் பராமரிக்கப்படுகிறது.

சபா மண்டபம் ஆலாம்பாளையம் அமரர் நஞ்சமுதலியார் அவர்களால் கட்டப்பட்டது. இன்றும் இவர் குடும்ப வாரிசுகளுக்கு திருவிழாவில் உரிய மரியாதை செய்யப்படுகிறது.

குருநாதர் சாமி வனம் கோவில் உருவான விதம் : -

ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் மேற்கொள்ள வனப்பகுதி ஒன்றினை தேர்தெடுக்க அது தற்போதைய புதுப்பாளையம் கோவிலில் இருந்து வடமேற்கில் 2 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

அக்காலத்தில் தாய் காமாட்சி அம்மன் தவம் செய்ய இவ்வனத்திற்கு செல்ல அப்போது அங்கே பல மாய மந்திர சக்தி கொண்ட உத்தண்ட முனிராயன் அவ்விடத்தை நான் விடமாட்டேன் என தடுக்க அம்மன் திரும்பி வந்து தன் மகன் குருதாதரிடம் சொல்ல தாயை தடுத்த மகா முனி உத்தண்டரை அழித்தே தீருவேன் என வாக்கு தந்து தம் சீடர் அகோர வீரபத்திரனை அழைத்து வனப்பகுதியை விட மறுக்கும் உத்தண்ட முனியை அழித்து வா எனக்கட்டளை இட சீடர் வீரபத்திரன் வனம் சென்று, உத்தண்ட முனிக்கு நல் உபதேசம் செய்தார்.


முனிராயரோ தன் அழிவு தெரியாமல் ஆணவமாக பேசினார். தற்போதுள்ள அந்தியூர் குருநாதசாமி வனத்தில் குருநாதரின் சீடர் அகோர வீரபத்திரனுக்கும் உத்தண்ட முனிக்கும் பெரிய சண்டை நிகழ்ந்தது .மாய தந்திரம் அறிந்த அறிந்த முனிராயர் தன் உருவத்தை பெரிதாக்கி உயரமாகி எதிர்க்க குருநாதசாமி மகாமேரு தேரில் முனிராயரை விட உயரமாகி சண்டையிட்டு உயிர் துறக்கும் முன் முனிராயர் குருநாதரிடம்

"என் அகந்தையை அழித்த குருநாதா.! எனக்கு பூர்வஜன்ம சாபம் உன்னால் நீங்கப்பெற்றேன். தங்கள் தாயார் காமாட்சி அம்மன் ஆர்வப்படி இங்கு தவம் மேற்கொள்ளட்டும். இன்றிலிருந்து இது குருநாதர் வனம் ஆகட்டும். ஆனால் நான் இல்வனத்தில் உன் சீடரான பாதுகாவலரான அகோர வீரபத்திரனின் எதிரில் கைகூப்பி தலை வணங்கி நிற்க அருள் புரிவாயா . ?

எனக் கேட்க குருநாதரும் மனமுவந்து

" அப்பா முனிராயா ! உன் பசிக்கு உணவு தர என் மனம் யோசிக்கிறது. ஏனெனில் என் தாயார் காமாட்சி அம்மன், பெருமாள் சாமி,நான் அனைவரும் சைவம்.எங்களுக்கு தேங்காய்,பழம்., பொங்கல் போதும்.

ஆனால்,உனக்கு ?என்க

அதற்கு முனிராயரோ
"குருவே ! பக்தர்கள் வைக்கும் இரட்டை பொங்கலில் எனக்கு ஒன்றை நீங்கள் எமக்கு தர வேண்டும் என கை கூப்பி வேண்டி நின்றார்,

குருநாதரும் சரியென வாக்களிக்க அன்று முதல் இன்று வரை பக்தர்கள் வெட்டும் சேவல் குருநாதரின் காவல் தெய்வமாக விளங்கும் உத்தண்ட முனிக்காகும்.வனத்துக்கோவிலில் கல் உருவம் வைத்து சீடர்கள் வீரபத்திரனும் உத்தண்ட முனியும் பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதாக வரலாறு.அன்று வைத்த கற்சிலை இன்றும் சிற்பியால் செதுக்காத பொற்சிலையாக வளர்ந்து வருகிறார்.

வரட்டுப்பள்ள நீர்தேக்க நீர் பள்ளத்தில் ஒட இயற்கையின் குளுமை நம்மை தாலாட்ட சுமார் 1 ஏக்கரில் குருஸ்தலமாகி நில மட்டத்தில் இருந்து 3 அடி குழிக்குள் மலை அடிவாரத்தில் குருநாத சாமி வனம் இருப்பது வியப்பு , சிறப்பு

.இங்கு ஸ்ரீ காமாட்சி அம்மன் தவநிலை எதிரில் சித்தேஸ்வரன், மாதேஸ்வரன் , அம்மன் வலபுறம் கீழ் நவ நாயகிகள்.ஏழுகன்னிமார்கள் .மேலும் மகா விஷ்ணு சன்னதியில் பெருமாள், ராமர்.லட்சு ணர்,சீதை ,பரத சத்துருக்ன்,ஆஞ்சநேயர் கருடாழ்வார் ஆகியோர் உள்ளதாக ஐதீகம்.

குருநாதர் இங்கே குன்றாய் இருக்க நாகதேவதை. தண்டகாருண்யர் ,தர்ப்பை அம்மன் எதிரில் அண்ணன்மார் முன்னுடையாரும் குருநாதர் கீழே பதினெட்டு சித்தர்களும் ,மூதாதையர்கள் மூவர் சிலையும் இடது ஓரம் சீடர் அகோர வீரபத்திரனும் ,எதிரில் உத்தண்ட முனிராயரும் அன்னப்பறவையும் காட்சி தர அருகே பஞ்ச பாண்டவர்கள் சிலைகள் உள்ளது.

குருநாதசாமி திருவிழா விபரம் :-

ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் முதல் புதன்கிழமை -பூச்சாட்டுதல் 2- வார வதுபுதன்கிழமை -கொடியேற்றுதல் 3-வது வார புதன்கிழமை வன பூஜை 4 வது வார புதன்,வியாழன்.வெள்ளி சனி ஆகிய நான்கு நாட்கள் ஆடிப் பெருந்தேர்விழா ( மிக விஷேசம் கூட்டம் அதிகமுள்ள பார்க்க வேண்டிய நாள் ). 5வது புதன்கிழமை பால்பூஜையுடன் முடிவடையும். ஆவணி மாதம் முதல் புதன்கிழமை சிதம்பரப்பூஜை எனும் படித்தரப்பூஜை வன்னியர் குல சத்திரியர்களால் நடைபெற்று வருகிறது.

சிதம்பர பூஜை முடித்து பூசாரி பூசை செய்ததும் அருள் வந்து திருவால விளக்கு என்னும் விளக்கில் பச்சை தண்ணீரில் விளக்கு எரித்தீக்காட்டி வணங்கி நிற்கும் பக்தர்களுக்கு பொது வாக்கு அளித்து பின்பூஜை முடித்து பிரசாதம் வழங்குதல் வழக்கம் ,இத்திருவிழாவில் மூலவரே உற்சவராக காட்சி தருவதால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

ஆடி மாதம் 4ஆம் புதன்கிழமை பல்லாக்கில் ஸ்ரீ காமாட்சி அம்மனும் ,சிறிய மகாமக தேரில் ஸ்ரீ பெருமாள்சாமியும் பெரிய மகாமகதேரில் ஸ்ரீ குருநாதசாமியும் வனத்திற்கு வரும். வனபூஜைகள் முடித்து அன்று இரவு 12.00மணிக்கு மேல் புறப்பட்டு காலை 6.00மணிக்கு அந்தியூர் புதுப்பாளையம்

( PLEASE SEE PART 3)

அருள்மிகு அந்தியூர் குருநாதசாமி வரலாறு பாகம் - 3 arul migu anthiyur gurunathasamy temple history part -3





அந்தியூர் குருநாதர்க்கு அண்ணன் முறையில் பெரிய குருநாதசுவாமி கோவிலாகும் .


இது அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் வழியாக 4கி.மீ ல் குருவரெட்டியூர் செல்லும் வழியில் உள்ளது.

இங்கு பில்லி,சூன்யம்,காற்று, கருப்பு,வைப்பு,பைத்தியம், என பல வியாதிகளைகளை குணப்படுத்தும் அழகிய ஆலயம்.இங்கு பிரதி வருடம் பங்குனி மாதம் 4 ஆம் வெள்ளிக்கிழமை நாள் ஒருநாள் திருவிழா ஆகும்.

அருள்மிகு கொன்னமரத்தய்யன் கோவில் வனம். இது சித்திரை மாதம் 4ஆம் வியாழக்கிழமை தேர்த்திருவிழாவாக உள்ளுர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பிரதிவாரம் மாலை 6.00 மணிக்கு பூஜை நடைபெறும். இவ்விரண்டும் அந்தியூர் குருநாதசாமி சம்பந்தப்பட்ட உபகோவில்களாகும்.

வாரபூஜை விபரங்கள் :

செவ்வாய் மாலை வேளை- அந்தியூர் குருநாதசாமி வனத்தில் பூஜை.

புதன்மாலை வேளை-

கொன்னமரத்தி அம்மன் கோவில் அந்தியூர்.

வெள்ளி மாலை வேளை-

பெரிய குருநாதர் பொரவிபாளையம்.

சனிக்கிழமை மாலை வேளையில் -அந்தியூர் குருநாதசாமி கோவில் பூஜை,
(Anthiyur gurunathasamy temple ) மற்றும் அமாவசை,மார்கழி அதிகாலை பூஜை ஆகியனவாகும்.

மாட்டுச்சந்தை :

தமிழ்நாட்டில் (tamilnadu) கூடும் பெரிய மாட்டுச்சந்தையில் அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழாவின் போது கூடும் மாட்டுச்சந்தையும் ஓன்றாகும்.

ஆடிமாதம் 4 ஆம் புதன் கிழமை மாட்டுச்சந்தையுடன் குதிரைச்சந்தையும் தொடங்கி விடும். 4 நாட்கள் நடக்கும் இச்சந்தைக்கு இந்தியாவின் (INDIA) பல பகுதிகளில் இருந்து குதிரை,மாடுகள் ஆயிரக்கணக்கில் வந்து பிரமாண்டமாக வியாபாரம் நடக்கும். இது 1951முதல் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

மாட்டுச்சந்தைக்கு தனியாக இடம் இல்லை எனினும் இப்பகுதி மக்கள் தங்கள் விவசாய நிலங்களை பலகாலமாக மாட்டுசந்தை நடைபெற உதவியாக உள்ளனர். தங்கள் நிலங்களில் ஆடிமாதம் மட்டும் பயிர் செய்யாமல் வைத்து மாடுகள்,குதிரைகள் கட்ட ஏக்கர் கணக்கில் உதவிசெய்வது சிறப்பு,


இந்த இடுகையை எழுத உதவியாக இருந்த "குருநாதசாமி திருக்கோவில் வரலாறு புத்தகம் " பி.ஜி பெருமாள் & சகோதர்கள் பரம்பரை அறங்காவலர் குடும்பம், குருநாதரின் வரலாற்றை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை தெரிந்து கொண்டு குருநாதசாமி வரலாற்று புத்தகத்தை பரிசளித்த தற்போதைய அறங்காவலர் குழு திரு.சாந்தப்பன் என்கிற செல்வன் அவர்களுக்கும்,ஜீ.பி.ராஜன் எல்.ஐ.சி ஏஜென்ட் (G.p Rajan l.i.c agent. guruvareddiyur ) அவர்களுக்கும், கோவில் பற்றி கேட்ட இடத்தில் எல்லாம் குருநாதசாமியின் பழங்கதைகள் கூறி உதவியாக இருந்த அனைத்து ஆன்மீக செம்மல்களுக்கும் என் மனம் உவந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

நீங்களும் ஆடிமாதத்தில் நடைபெறும் அந்தியூர் குருநாதசாமியை ( ANTHIYUR ARULMIGU GURUNATHASAMY TEMPLE )தரிசனம் செய்து, குதிரை .மாட்டுச்சந்தைகளை தரிசித்து


அருள்மிகு குருநாதர் அருள் பெற்று எல்லா நலமும் வளமும் பெற

இறை துணை வேண்டுகிறேன்.


குருநாதசாமி வனமும் 2011 விழாவின் சிறப்பும்


அருள்மிகு குருநாதசாமி திருக்கோவில் வனம் :


அருள்மிகு குருநாதசாமி வனம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோவில் இருந்து 3கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஓர் அற்புதமான ஆலயமாகும்.



வனத்தில் மூலவராக வீற்றிருப்பது குருநாதசாமியாகும். உடன் பெருமாள் சாமியும்,காமாட்சி அம்மனும் அருள்புரிகின்றனர். அருகே நாகப்புற்று அமைந்துள்ளது. ஊஞ்சல் போன்ற அமைப்பும் உள்ளது.


சமதளத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக கீழிறங்கி தரிசனம் செய்ய பள்ளம் போன்ற அமைப்பில் குருநாதசாமி வனம் அமைந்துள்ளது.

சுமார் 500 மீட்டரில் இவ்வனத்தில் வேம்பு,தென்னை,ஆலமரம்,ஊஞ்சன்மரங்கள் மற்றும் பழங்கால மரங்கள் அமைந்து குளுமையாக உள்ளது.

வேண்டுதல் நிறைவேறிய பின் பல குடும்பங்கள் வந்து ஆடிமாத கோவில் திருவிழா நாட்களில் இங்கு பொங்கல் இட்டு ஆடு,கோழிகளை பலியிட்டு , செல்வது வழக்கம்.

அருள்மிகு குருநாதசாமி வனத்தில் இருந்து திருவிழாவின் போது மடப்பள்ளிக்கு புதுப்பாளையத்திற்கு தேரில் குருநாதசாமி,பெருமாள் சாமி,காமாட்சி அம்மன் ஆகியோர் திருவிழா நாளில் பக்தர்கள் வரமளிக்க தேரில் வருவார்கள்.இந்த வருடம் 2011 ன் திருவிழா சிறப்பாக லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தர 5 நாட்கள் நடந்தது .

திப்புசுல்தான் ஆட்சியில் தன் குதிரைப்படைக்கு தேவையான குதிரைகளை வாங்க அந்தியூரில் குதிரைச்சந்தை அமைத்ததாக வரலாறு இந்த வருடம் நொக்ரா,காட்டியவாடி ,கத்தியவார் போன்ற பல ரக குதிரைகளும் விற்பனைக்கு வந்திருந்தது.5லட்சம் வரை குதிரை விலை சொல்கிறார்கள்.


,மாட்டுச்சந்தையில் மலைமாடுகள் காங்கேயம் காளைகள்,சிந்து ,ஜெர்சி வந்திருந்தன. குஜராத்தில் இருந்து வந்த ஜாப்ரா இன எருமைமாடுகள் வித்தியாசமாய் இருந்தன.

காது நீண்ட ஜமுனாபாரிஆடுகள் பல வகையான வளர்ப்பு பிராணிகள் கொண்டு வரப்பட்டிருந்தது. பலவகையான ராட்டினங்கள்,கம்பி வளைக்குள் கார்,பைக் சர்க்கஸ் மற்றும் தூரிகள் குழந்தைகள் ரயில் கப்பல் தூரி, என அழகாய் நடந்தது. பேரிக்காய்,கொள்ளேகால் மிட்டாய், சோழக்கருது சாப்பிடாமல் வரமுடியாது.


மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்வில் அடுத்த வருடம் ஆடிமாதமாவது வந்து கலந்துகொண்டு அருள்மிகு குருநாதர் அருள்பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்தும்

அன்பன் குரு.பழ.மாதேசு


ஆடி கடைசியில் அந்தியூர் குருநாதசுவாமி கோயில்


ஆடி கடைசியில் அந்தியூர் குருநாதசுவாமி கோயில் திருவிழா 5 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு இப்போதெல்லாம் 6 லட்சம் பேருக்கு மேல் கூடுவார்கள். இதிதிருவிழாவை ஒட்டி நடக்கும் குதிரைச்சந்தையும், மாட்டுச்சந்தையும் தென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும். ஐதர் அலி காலத்திற்கு முன் இருந்து இந்த சந்தை நடை பெற்று வருகிறது. 

இப்பொழுது எல்லாம் அங்காங்கே பொருட்காட்சி நடத்தி ராட்டினம், பைக்ரேஸ் போன்றவை நடத்துகிறார்கள். சிறுவயதில் எங்களுக்கெல்லாம்  ராட்டினம் என்றால் அந்தியூர் திருவிழா தான் ஞாபகத்திற்கு வரும்.
 
அந்த 5 நாட்களும் தினமும் சென்று ராட்டினம் மற்ற விளையாட்டுக்கள் ஒவ்வொன்றையும் விளையாடினால் தான் திருப்தி. எங்க பெரியப்பா கட்சி பதவியில் இருந்ததால் எங்களுக்கு பாஸ் கிடைக்கும் அதை வைத்துக் கொண்டு ஒவ்வொரு விளையாட்டையும் தினம் தினம் ரசித்து ரசித்து விளையாடுவோம்.
 
அதற்கடுத்த நாள் எங்க குடும்பத்தின் கிடா விருந்து அந்தியூர் வனத்தில் நடக்கும் இதில் சொந்த பந்தம் மற்றும் நண்பர்களோடு இன்று வரை வருடா வருடம் கிடா விருந்து களை கட்டும் அவர்கள் சொந்தத்தில் அவர்களின் விருந்து மறுபடியும் எப்ப எப்ப என்று கேட்கும் அளவிற்கு கொண்டாடுவார்கள்...இந்த வருடமும்...

அந்தியூர் குதிரை சந்தை வரலாறும் படங்களும் 

குருநாதசுவாமி கோயில்


 கோயிலுக்குச் சென்றோம்.இக்கோயில் ஊரை விட்டு 10கிலோ மீட்டர் தொலைவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த இடத்திற்கு பெயர் வனம். இக்கோயிலைச்சுற்றி உள்ள வனத்தில் மக்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டி திருவிழாவை கொண்டாடுவார்கள். திருவிழா சமயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோவிலுக்குச் சென்றால் திரும்பிய பக்கம் எல்லாம் ஆடு, கோழி என விருந்து களை கட்டும். திருவிழா சமயம் மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகலும் விருந்து நடைபெறும்

குதிரை சந்தை மற்றும் மாட்டுச்சந்தைகளில் இந்த வருடம் முடிந்தவரை படங்கள் அனைத்தையும் அள்ளி வந்துள்ளேன்.

குதிரை சந்தை

அந்தியூரில் குதிரை சந்தை திப்புசுல்தான் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. திப்புசுல்தான்னின் படைத்தளங்களில் முக்கியமான தளம் அந்தியூர் இங்கு முன் இருந்த கோட்டையில் தான் குதிரைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் இவரின் குதிரைகளை விற்கவும் அந்த காலத்தில் கள்ளிக்கோட்டையில் இருந்து வரும் அரபுகுதிரைகளை வாங்கவும் அதிகம் குதிரை உள்ள இடமான அந்தியூரை தேர்வு செய்து சந்தையை உருவாக்கி உள்ளனர். குதிரைக்கான லாடம், சாரம் வண்டி மற்றும் அணிகலன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு இச்சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் சந்தை தனியாக இருப்பதை விட திருவிழாவின் போது சந்தை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று குருநாத சுவாமி திருவிழாவின் போது இச்சந்தை வருடா வருடம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் எங்கும் இருந்து 7 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிகின்றனர். குதிரைச்சந்தையுடன் மாட்டுச்சந்தையும் நடைபெறுகிறது, தமிழகத்தில் பிரபலமான காங்கேயம் காளைகள் இச்சந்தையில் அதிகம் விற்பனை ஆகிறது.

இப்போதைய சந்தையில் மக்கள் அதிகம் கூடுவதால் வீட்டு உபயோகப்பொருட்கள், சோளக்கருது, பேரிக்கா, மைசூர் பருப்பி, அல்வா ம்ற்றும் புதிதாக வந்துள்ள விவசாயப்பொருட்கள், பொழுது போக்கிற்காக பல வகையான இராட்டினங்கள் என்று களை கட்டியது அந்தியூர் சந்தை...
இக்குதிரையின் விலை ஒரு லட்சத்து 50 ஆயிரம்

80 ஆயிரம்

காங்கேயம் காளை

 ஜமுனா பாரி ஆடுகள்

தற்போது எங்கள் பகுதியில் அதிக மக்கள் விரும்பி வளர்க்கும் ஈமு கோழி

ஜோடி 1ஒரு இலட்சத்து 50 ஆயிரம்

2 லட்சம்

சாரட் வண்டியின் விலை 60 ஆயிரம்



காங்கேயம் காளை (க்ராஸ்க்காக கொண்டு வரப்பட்டது)

4 இலட்சம்

3 இலட்சம்

4 இலட்சம்

2 லட்சத்து 50 ஆயிரம்

3 இலட்சம்

4 இலட்சம்

இசைக்கு தகுந்த படி நடனம் ஆடும் குதிரை 4 இலட்சமாம்